திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கைலாசநாதர் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை நடைபெற்றது. இதையொட்டி முன்னிட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, தயிர், திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது. பின்பு கைலாசநாதர் செண்பகவல்லி சுவாமிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை காட்டப்பட்டது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.