நத்தம்: கைலாசநாதர் கோவில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம்

61பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோவில். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. திருமணிமுத்தாற்றின் தென்கரையில் பிரகார மண்டபங்களுடன் பெரிய மதில் சுவரும் 14 கால் மண்டபமும் கருப்பணசாமி பிடாரியம்மன் தென்புறத்தில் பகவதி அம்மன் ஆகிய கோயில்களை அடங்கிய திருக்கோவிலாக அமைந்துள்ளது.
கடந்த (மே. 31)-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பித்தது. தொடர்ந்து கைலாசநாதர் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவையொட்டி தினமும் காலை மாலை இரு வேலைகளில் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. நேற்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று சிறப்பு வாய்ந்த செண்பகவல்லி அம்மன் கைலாசநாதர் சுவாமி தேரோட்டம் சிறப்பாக ஆர்மபிக்கப்பட்டது. இதில் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து ஊர்வலமாகச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி