எரியோடு: டூ வீலர் மீது கார் மோதியதில் விவசாயி பலி

61பார்த்தது
வேடசந்தூர் தாலுகா எரியோடு அருகே உள்ள
வாத்தியார் புதூரை சேர்ந்தவர் ராஜு வயது 75 விவசாயி. இவர் தனது தோட்டத்தில் நடுவதற்காக கத்திரினாத்து வாங்குவதற்காக டூ வீலரில் கோவிலூர் நோக்கி சென்றார். செல்லக்குட்டியூர் பிரிவில் சென்ற போது குஜிலியம்பாறையை நோக்கி சென்ற கார் மோதியதில் படுகாயம் அடைந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். எரியோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி