திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த கண்டெய்னர் (கொரியர்) லாரியை சங்கரன்கோயிலை சேர்ந்த மாடசாமி மகன் குமார்(34) என்பவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது நத்தம் கோரிமேடு பள்ளிவாசல் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குமார் தலை, கை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.