திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 19) ஏடிஎம்மில் பணம் எடுக்கச் செல்லும்போது முன் பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.