நத்தம் அருகே காரும்- வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து

74பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோபால்பட்டி வடுகபட்டி பிரிவு சாலையில் கன்னியாபுரம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான மில் வேன் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு நத்தம் நோக்கி வந்துள்ளது. அப்போது நத்தத்திலிருந்து திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நோக்கி தனியார் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு
சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் சாலையின் நடுவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதது. இதில் காரை ஓட்டி ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ஓட்டுநர் முனீஸ்வரன்(21) உள்ளிட்ட வேனில் பயணம் செய்த 7 பணியாளர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தினால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி