திண்டுக்கலல் மாவட்டம் நத்தம் அய்யனார்புரம் கள்ளழகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று மாணவர்கள் வியாபாரயுக்திகளை கற்றுக்கொள்ள வணிகத் திருவிழா நடைபெற்றது. விழாவினை பள்ளி முதல்வர் நடராஜன் துவக்கி வைத்தார். இதில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முப்பதிற்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து விற்பனை அங்காடிகளை அமைத்திருந்தனர். இதில் பாரம்பரிய உணவு வகைகள் விதைகள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பழங்கள் இடம்பெற்றன.