திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் உப கோவிலான மங்கலப்புள்ளி லட்சுமி நரசிம்மர் கோவில் 72 ஆண்டுகள் கழித்து கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று(அக்.04) தாடிக்கொம்பு திருக்கோயில் அறங்காவலர் குழு சார்பாக இன்று சுதர்சன ஹோமம் செய்யப்பட்டது. தாடிக்கொம்பு திருக்கோயில் மற்றும் மங்கல புள்ளி அர்ச்சகர்கள் இந்த ஹோமத்தை சிறப்பாக செய்து முடித்தனர்.