திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது காந்திமார்க்கெட் அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த N. பஞ்சம்பட்டியை சேர்ந்த சவரிமுத்து மகன் பவுல்தீபன்பெலிக்ஸ்(28) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.