திண்டுக்கல்: மகளிர் சுய உதவிக்குழுக்களின் சந்திப்பு கூட்டம்

62பார்த்தது
தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மாவட்ட அளவில் வாங்குவோர் மற்றும் விற்போருக்குக் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஊராட்சி திட்ட இயக்குநர் திலகவதி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் சுபாஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருணாசலம், மாவட்ட சமூக நலத் துறை அலுவலர் புஷ்பகலா முன்னிலை வகித்தனர். 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநர் சதீஷ் பாபு வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து, மகளிர் சுய உதவிக் குழுத் தயாரிப்புகளில் வாங்குவோர் மற்றும் விற்போருக்குக் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை துவக்கி வைத்து பேசினார். முன்னதாக மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களின் விற்பனைக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் சரவணன் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்க மேலாளர் வேல்முருகன், உதவித் திட்ட அலுவலர்கள் அருண்குமார், பிரியங்கா, ரம்யா, மாவட்ட வள பயிற்றுநர் குமார், செல்லப்பாண்டி உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி