ஈரோட்டை சேர்ந்த டிலோ எனும் நிறுவனம் அதன் லோகோவிற்கு அங்கீகாரம் பெற்று கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை தயார் செய்து விற்பனை செய்கிறது.
திண்டுக்கல்லில் அதேபோன்ற லோகோவை பயன்படுத்தி சிறிய மாற்றங்களுடன் போலியாக கூல்ட்ரிங்ஸ் தயார் செய்து விற்பனை செய்து வருவதாக டிலோ நிறுவன மேலாளர் குமரவேல் புகாரில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு ஆய்வாளர் ஜெப்லா உள்ளிட்ட அதிகாரிகள் செட்டிநாயக்கன்பட்டி, அசோக்நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கூல்ட்ரிங்ஸ் நிறுவனத்தை சோதனை செய்தனர்.
லோகோவை போலியாக பயன்படுத்தி கூல்ட்ரிங்ஸ் பாட்டில்களை தயார் செய்தது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த நிறுவனத்தின் உரிமையாளரான பொன்னம்மாளை கைது செய்து அவரிடமிருந்து கூல்ட்ரிங்ஸ் பாட்டில்கள் மற்றும் லேபிள்களை பறிமுதல் செய்தனர்.