திண்டுக்கல்: சமூக மத நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு விழா

83பார்த்தது
திண்டுக்கல் பேகம்பூர் அருகே உள்ள SPT திருமண மண்டபத்தில் எஸ் டி பி ஐ கட்சி சார்பில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் சமூக மத நல்லிணக்க நோன்பு திறப்பு விழா நடைபெற்றது. எஸ் டி பி ஐ திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் அபுதாஹிர் மாவட்ட பொதுச் செயலாளர் தௌஃபிக் வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி சீனிவாசன், ஜமாத்துல் உலமா சபை மாவட்டச் செயலாளர் அப்துர் ரகுமான் யூசுபி, மதுரை மாவட்ட அதிபர் பங்குத்தந்தை பெர்னாட்ஷா, சமூக ஆர்வலர் நாட்டாண்மை காஜாமைதீன், தவெக மாவட்ட தலைவர் தர்மராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இமாம்கள் இப்தார் நோன்பை முன்னிட்டு சிறப்புத் தொழுகை நடத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பரமசிவம் பிரேம்குமார் மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், தேமுதிக விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் ஜாதி மத பேதம் இன்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி