திண்டுக்கல்: பாரதிய ஜனதா கட்சி சார்பில் சாலை மறியல்

80பார்த்தது
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அரசு மதுபான கிட்டங்கியில் ஆயிரம் கோடிக்கு மேல் ரூபாய் ஊழல் செய்ததை கண்டித்து டாஸ்மார்க் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அவரை காவல்துறையினர் நடுவில் மறித்து கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் பாரதிய ஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் முத்துராமன் உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி