திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மேற்கு வட்டம் பள்ளப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பிஸ்மிநகர், A B நகர் மற்றும் நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அந்த நெடுஞ்சாலையில் வேகத்தடை மற்றும் உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாலுகா காவல் ஆய்வாளர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர். இந்த இடத்தில் நேற்று இரவு 11.00 மணி அளவில் நடந்த விபத்தில் பிஸ்மிநகர் பகுதியைச் சேர்ந்தவர் டியூஷன் ஆசிரியர் உயிருக்கு போராடும் நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதற்கு முன் நடந்த விபத்தில் ஒருவர் கால் இழந்ததும் குறிப்பிடத்தக்கது.