திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் பால் வழங்கி வரும் சங்க உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு ஆவின் மூலம் மாடு ஒன்றுக்கு ரூ. 40,000 மதிப்பில் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. காப்பீடு தொகையாக மாடு ஒன்றுக்கு விவசாயிகள் ரூ. 75.00 மட்டும் செலுத்தினால் போதுமானது. மேலும், ஆவின் ஒன்றியத்திற்கு பால் ஊற்றி வரும் சங்க உறுப்பினர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 3.00 கூடுதலாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேற்படி சலுகைகளை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்தி, ஆவின் நிறுவனத்துக்கு பால் வழங்கி தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.