திண்டுக்கல்: 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை

76பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் பித்தளைப்பட்டி, வக்கம்பட்டி, அனுமந்தராயன் கோட்டை, வீரக்கல் ஆகிய பகுதிகள் திண்டுக்கல், குமுளி இரண்டு வழிச்சாலையாக அமைந்துள்ளன.

இதனை நான்கு வழிச்சாலையாகவும், பித்தளைபட்டி அருகே மேம்பாலம் அமைக்கவும் கடந்த 10 வருடமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறிப்பாக அப்பகுதி மக்கள் காய்கறிகள் பூக்கள் அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். அவர்கள் தங்கள் விவசாயம் செய்த பொருட்களை திண்டுக்கல் அல்லது ஒட்டன்சத்திரம் கொண்டு செல்வதற்கு இந்த சாலையை பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த சாலையில் வருடத்திற்கு 100க்கும் மேற்பட்ட நபர்கள் வாகன விபத்தில் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை மாவட்ட ஆட்சியரை சந்தித்து இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு மனு அளிக்க வந்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தினால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் இணைந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கட்டிடத்தின் வெளியே உள்ள பூங்காவில் பொதுமக்கள் காத்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி