திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கென மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 28 விடுதிகள், பள்ளி மாணவிகளுக்கு 14 விடுதிகள், கல்லூரி, பொலிடெக்னிக்கிலும் மாணவர்களுக்கு ஓர் விடுதி, மாணவிகளுக்கு 6 விடுதிகள் செயல்படுகின்றன.
இதேபோல், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 24 விடுதிகள், மாணவிகளுக்கு 13 விடுதிகள், கல்லூரி மாணவர்களுக்கு 3 விடுதிகள், மாணவிகளுக்கு 2 விடுதிகள் என மொத்தம் 42 விடுதிகள் செயல்படுகின்றன. கள்ளர் சீரமைப்புத் துறை சார்பில், மாணவர்களுக்கு 5 விடுதிகள், மாணவிகளுக்கு 2 விடுதிகள் என 7 அரசு கள்ளர் விடுதிகள் செயல்படுகின்றன.
இதுதவிர கொடைக்கானல், கீழ்மலைப் பகுதியில் உறைவிடப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, பாலிடெக்னிக்குகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் சேர்க்கை அளிக்கப்படுகிறது. அரசு மாணவியர் விடுதிகளில் மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.