திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் ஹிந்து மஸ்தூர் சபாவின் தமிழ் மாநிலக் குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எச் எம் எஸ் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் மற்றும் மாநில நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு பின் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: - மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோத, மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை கண்டித்தும் தொடர்ந்து இந்தியாவில் இருக்கின்ற தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியும் கூட தொழிலாளர்களுக்கு விரோதமாக இருக்கக்கூடிய நான்கு சட்ட தொகுப்புகளை எங்களோடு விவாதிக்க வேண்டும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை மத்திய அரசு புறம் தள்ளி உள்ளது.
வங்கிகளிலே மோசடி செய்கின்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசாங்கமாக இந்த அரசு உள்ளது. ஆனால் கிசான் கார்டுகள் மூலம் ஒரு லட்சம் கடன் வாங்கக்கூடிய விவசாயிகளை துன்புறுத்துகின்ற அரசாங்கமாக இந்த அரசாங்கம் உள்ளது. இந்த அரசாங்கம் கார்ப்பரேட் அரசாங்கமாக மாறி உள்ளது.