திண்டுக்கல்: திமுக நாடு போற்றும் நான்காண்டு பொதுக்கூட்டம்

56பார்த்தது
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் "நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு" என்ற தலைப்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் திண்டுக்கல் மாநகர திமுக கிழக்கு பகுதி சார்பில் நாயக்கர் புது தெரு பகுதியில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திண்டுக்கல் திமுக வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன் வரவேற்புரை ஆற்றினார். இதில் கலந்துகொண்ட தலைமை கழக பேச்சாளர் கரூர் மதிவாணன் மக்களிடையே உரையாற்றினார்.


இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளர் பிலால் உசேன், ஒன்றிய செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி