திண்டுக்கல்: மாநகராட்சி நிதி நிலை அறிக்கை

69பார்த்தது
திண்டுக்கல் மாமன்றக் கூட்டம் மேயா் இளமதி தலைமையில் நடைபெற்றது. இதில் 2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை உள்பட இயல்பு கூட்ட தீா்மானங்கள் 23, அவசரக் கூட்ட தீா்மானங்கள் 17 என மொத்தம் 40 தீா்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. நிதி நிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மாமன்றத்தில் எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இயல்பு கூட்ட தீா்மானங்களில் ஒன்றாக நிதிநிலை அறிக்கைக்கும் ஒப்புதல் பெறப்பட்டது.

2025-26-ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில், வரி இனங்கள் மூலம் ரூ. 19. 48 கோடி, வரி அல்லாத வருவாய் ரூ. 6. 35 கோடி, கட்டணங்கள் மூலம் ரூ. 1. 89 கோடி, மாநில நிதி ஆணையப் பகிா்மான நிதி ரூ. 30 கோடி, அரசு மானியங்கள் ரூ. 32. 61 கோடி உள்பட மொத்தம் ரூ. 92. 28 கோடி வருவாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே நேரத்தில் மாநகராட்சி ஊழியா்கள் ஊதியத்துக்கு ரூ. 33. 45 கோடி, திட்டப் பணிகளுக்கு ரூ. 33. 64 கோடி, கடன் நிலுவைத் தொகைகள் ரூ. 7. 71 கோடி, இயக்கம், பராமரிப்புச் செலவு ரூ. 21. 21 கோடி, நிா்வாகச் செலவினங்கள் ரூ. 1. 96 கோடி உள்பட மொத்தம் ரூ. 98. 19 கோடி செலவு ஏற்படும் என்றும், இதன் மூலம் ரூ. 5. 90 கோடி பற்றாக்குறை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 30 நிமிடங்களில் கூட்டம் நிறைவடைந்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி