திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகர், சந்தப் பேட்டையில் நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைந்துள்ளது.
இங்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், நூலக பதிவேட்டை ஆய்வு செய்த போது அதில், டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்காக 60 நபர்கள் பதிந்துள்ளனர். இதனை எடுத்து அரசு மற்றும் வங்கி தேர்வாளர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், நூலகம் வந்திருந்த மாணவர்கள் இடையே குறைகளை கேட்டு அறிந்தார்.
6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை அதிகப்படுத்த வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்கு ஏற்றபடி புத்தகங்களை அதிகப்படுத்தி தருவோம் என தெரிவித்தார்.
அதேபோல் பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள் படிப்பதற்கு ஏதுவாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகத்தின் நேரங்களை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் நூலகங்கள் வெளியே மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கான வசதிகளை செய்யவும், நூலகத்தில் வெளிக் கதவை இரவு வரை திறந்து வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.