திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்ட சாதனையர் பயிலகத்தை(Achievers Study Centre) மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் திறந்து வைத்து, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.