திண்டுக்கல், அண்ணா சிலை அருகே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதடைந்து நின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த காவலர் ஒருவர் பொதுமக்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் உதவியுடன் பழுதான பேருந்தை தள்ளி சாலை ஓரமாக நிறுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.