திண்டுக்கல் நகரின் மத்தியில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான 400 வருடங்கள் பழமையான அருள்மிகு அபிராமி அம்மன் கோவில் உள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா 12 நாட்கள் வெகு விமர்சனையாக நடைபெறும்.
திருவிழாவின் போது ஒவ்வொரு நாளும் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்
இதனைத் தொடர்ந்து 11ம் நாளான இன்று 09. 05. 25 மாலை 60அடி உயரம் கொண்ட மரத்திலான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கோவிலில் இருந்து பத்மகிரிஸ்வரி அபிராமி அம்மன் ஞானாம்பிகை உற்சவர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பின்னர் 60 அடி உயரத்தில் ஆன தேரில் பத்மகதீஸ்வரர் அபிராமி அம்மன் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைவர் சரவணன், மாநகராட்சி மேயர் இளமதிஜோதி பிரகாஷ், இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் கார்த்திகேயன் தாடிக்கொம்பு கோவில் அறங்காவலர் தலைவர் விக்னேஷ் பாலாஜி மற்றும் அபிராமி அம்மன் கோவில் அறங்காவலர்கள் தேரின் வடத்தினை இழுத்துச் சென்றனர்.