திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு கிராமத்தில் கோழிப்பண்ணையின் மேற்கூரையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி பலியாகின. இதுகுறித்த தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பண்ணையில் ஏற்பட்ட தீயை போராடி அணைத்தனர். பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.