திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 286 பேர் தேர்வு எழுதினார். அதில் 22, 287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 81. 2% தேர்ச்சி பெற்று37 இடத்தை பிடித்திருந்தது. இந்த கல்வியாண்டில் 91. 77 சதவீதம் பெற்று 19-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை அரசு பள்ளிகள் 30, அரசு உதவி பெறும் பள்ளிகள் 2, பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் 8, தனியார் பள்ளிகள் 66 என மொத்தம் 106 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளனர்.