திண்டுக்கல் வந்தடைந்த ராஜீவ் காந்தி யாத்ரா ஜோதி

2208பார்த்தது
கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் ராஜீவ் காந்தி ஜோதி யாத்ரா நினைவு ஜோதிக்கு தோமையார்புரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மே 17 2023 ராஜீவ் காந்தி ஜோதி யாத்ரா கமிட்டி சார்பில் ஜோதி யாத்திரை கமிட்டி தலைவரும் சென்னை மாநகராட்சி எதிர்கட்சி தலைவருமான திரவியம் தலைமையில் கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர் வரை ராஜீவ் காந்தியின் நினைவாக, ராஜீவ்காந்தி ஜோதி கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் வந்தடைந்த ராஜீவ் காந்தி யாத்ரா ஜோதி குழுவினருக்கு திண்டுக்கல் மாநகராட்சி எல்லையான தோமையார்புரத்தில் திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸார் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மச்சக்காளை, முகமது சித்திக் கிழக்கு மண்டல தலைவர் கார்த்திக், மாவட்ட மாநகர மகிலா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம், முகமது, அலியார், கவுன்சிலர் பாரதி, மதுரை வீரன், அமீர், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் 6 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ராஜீவ் காந்தி யாத்ரா ஜோதியினை எடுத்து வந்தனர்.

தொடர்புடைய செய்தி