திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சுப முகூர்த்த நாட்களான ஆடி 3 வது வெள்ளி, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை ஆகிய விஷேச தினங்கள் தொடர்ந்து வருவதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் ரூ. 300 க்கு விற்ற மல்லிகை பூ இன்று ரூ. 600க்கும், ரூ. 130 க்கு விற்ற முல்லைப்பூ ரூ. 360 க்கும், ரூ. 250 க்கு விற்ற கனகாம்பரம் ரூ. 400க்கும், ரூ140 க்கு விற்ற ஜாதி பூ ரூ. 400க்கு, ரூ40க்கு விற்ற ரோஜா ரூ140க்கும் விற்பனையானது.