திண்டுக்கல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

58பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளைக் களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காகவும், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. 

இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 282 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, உதவி ஆணையாளர்(கலால்) பால்பாண்டி, தொழிலாளர் உதவி ஆணையாளர் ராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் அன்பழகன், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) கங்காதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி