தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்ற நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். நத்தம்-புளி, ஆயக்குடி-கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கைக்கு புவிசார் குறியீடுகள் பெற நடவடிக்கை. திண்டுக்கல்லில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.6 கோடி. ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு. வெண்ணைப்பழ சாகுபடியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் என அறிவித்தார்.