திண்டுக்கல்: திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுப்பிரமணியன் (70) என்பவர் உயிரிழந்தார். அதேபோல் பழனி சாலை ராமையன் பட்டியில் அரசு பேருந்து மோதி அருளானந்தம் (75) என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்துக்கள் குறித்து விசாரிக்கின்றனர்.