சின்னாளபட்டி: கோயிலில் வினோத வழிபாடு

54பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி கடைவீதி பகுதியில் அமைந்துள்ளது காமயசுவாமி திருக்கோவில். ஸ்ரீ முனியப்ப சுவாமி கோவிலின் உப கோவிலான ஸ்ரீ காமயசாமி கோவிலில் 140 வருடங்களாக அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வழிபாடு செய்து விழாவை கொண்டாடி வருகின்றனர். 

இவ்வருடம் விழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 2ஆம் தேதி பிருந்தாவனத் தோப்பிலிருந்து காமயசுவாமியை மேளதாளத்துடன் அழைத்து வந்தனர். கரும்பு, அரச இலை, மா இலை, கொட்டமுத்து இலை, பூக்களை ஒன்றாக சேர்த்து காமயசுவாமியை அலங்காரம் செய்திருந்தனர். பின்னர் வானில் மூன்றாம் பிறை பார்த்த பின்பு கோவிலுக்கு காமயசுவாமியை அழைத்து வந்தனர். அதன்பின்னர் சுவாமி ஊன்றப்பட்டவுடன் தினசரி கட்டளைதாரர்கள் வழிபாடு செய்தனர். 

விழா நிறைவாக காமதகனம் நடைபெற்றது. காமன் மார்பில் ரதி மன்மதன் படங்கள் வைக்கப்பட்டு வழிபாடு செய்த பின்பு காமதகனம் நடைபெற்றது. காமயசுவாமி நெருப்பில் எரியும் போது நேர்த்திக்கடனுக்காக உப்பு மிளகு போட்டு வழிபாடு செய்தனர். அதன்பின்னர் பெரிய திருநங்கை மூலம் ஒப்பாரி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றதுடன் பக்தர்களுக்கு மொச்சைப்பயிர் பிரசாதமாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி