திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கி சிறுத்தை சட்டவிரோதமாக உயிரிழந்திருப்பதாக வனத் துறையினருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வனத் துறையினா் இரண்டரை வயது மதிக்கத்தக்க உயிரிழந்த ஆண் சிறுத்தையை மீட்டு விசாரித்தனர்.
பின்னர், திருச்சி வனத் துறை மருத்துவர் சிவச்சந்திரன், சிறுத்தையின் உடலைக் கூறாய்வு செய்தார். பின்னர், உடல் எரியூட்டப்பட்டது. இதுகுறித்து வனத் துறையினர் கூறியதாவது: அய்யம்பாளையம் காப்புக்காடு பகுதியில் இருந்து, சுமார் 200 மீட்டர் தொலைவில்