ஆத்தூர்: திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

59பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கரிசல்பட்டி, ஆடலூர், பன்றிமலை, தருமத்துப்பட்டி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த தி. மு. க. பிஎல்2, பில்எசி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு செயலாளர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கரிசல்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான ப. க. சிவகுருசாமி தலைமை தாங்கினார்.

ஒன்றிய துணைச் செயலாளர் தருமத்துப்பட்டி பிரபாகரன், கரிசல்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பால்ராஜ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கோனூர் திருப்பதி, ஜஸ்டின் மிக்கேலம்மாள், சுப்புலட்சுமி வள்ளுவர்தாஸ், தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் சிறப்புரையாற்றினார்

அவரையடுத்து தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவருமான ப. க. சிவகுருசாமி பேசும்போது, திமுகவினரை பொறுத்தவரை தேர்தல் பணியாற்றுவதில் யாரும் சுணக்கம் அடைவது கிடையாது. ஆனால் எதிர்க்கட்சிகள் குறுந்தகவல்கள் மூலம் அவதூறாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். அதை முறியடிக்கத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் போடப்பட்டுள்ளது என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி