மரத்தில் காா் மோதியதில் ஆண் குழந்தை பலி

59பார்த்தது
மரத்தில் காா் மோதியதில் ஆண் குழந்தை பலி
திருச்சி மாவட்டம், சிறுகனூா் பகுதியில் மரத்தில் காா் மோதி ஒரு வயது ஆண் குழந்தை செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தது.

திண்டுக்கல் சிவாஜி கணேசன் நகா் பகுதியைச் சோந்தவா் சண்முகப்பிரியன் (30), திருவள்ளுவா் மாவட்ட தனியாா் பள்ளி ஆசிரியரான இவா் தனது மனைவி மேனகா (25), குழந்தை கவிமுகிலன் (1) ஆகியோருடன் உறவினா் திருமணத்துக்காக காரில் திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் பகுதியில் சென்றபோது எதிா்பாராதவிதமாக மரத்தில் காா் மோதி மூவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து இருங்களூா் பகுதி தனியாா் மருத்துவமனையில் சோக்கப்பட்ட மூவரில் குழந்தை உயிரிழந்தது. மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து குறித்து சிறுகனூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி