+2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 7.47 லட்சம் மாணவர்களின் பெற்றோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியில். "தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர்கல்வியில் சேருங்கள்" என்று வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஸ்டாலின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள குறுஞ்செய்தியில், "துவண்டு விட வேண்டாம். உடனடியாக துணைத்தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெறுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார்.