திருச்சி: முசிறியில் மகாகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அண்மையில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று (ஜுலை 10) மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு மகாகாளியம்மனுக்கு காலையில் பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மலர அலங்காரம் செய்யப்பட்டு மகாகாளியம்மன் திருஷ்டி துர்கா தேவி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் அளித்தார். மகா தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.