நல்லம்பள்ளி அருகே பரங்கிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தாதப்பன். இவருடைய மனைவி குப்பம்மா கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த குப்பம்மா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தொப்பூர் போலீசார் குப்பம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.