தர்மபுரி மாவட்டம் தொட்டம் பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தொப்பூர் அருகேமோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த இவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.