அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

59பார்த்தது
தர்மபுரியில் பட்டு வளர்ச்சித் துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 208 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனை க்கு கொண்டு வரப்பட்டன. இதனிடையே நேற்று பட்டுக்கூடு வரத்து 1, 135 கிலோவாக அதிகரித்தது. நேற்று முன்தினம் 1 கிலோ அதிகபட்சமாக ரூ. 516-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ. 7 குறைந்தது. 1 கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ. 509-க்கும், குறைந்த பட்சமாக ரூ. 342-க்கும், சராசரியாக ரூ. 455. 96-க்கும் விற்பனையானது. மொத் தம் ரூ. 5 லட்சத்து 17ஆயிரத்து 854-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி