ஒகேனக்கலில் வெள்ளம் - சாலை மூழ்கியதால், போக்குவரத்து நிறுத்தம்

60பார்த்தது
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், கர்நாடகா அணைகள் முழுதும் நிரம்பிள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு வினாடிக்கு 2. 50 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து வினாடிக்கு நிலவரப்படி 2. 20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி, நீர்வரத்து அதிகரிப்பால், கடந்த ஒரு வார காலமாக, காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 18-வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கும், பரில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டு, முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் தேன்க னிக்கோட்டை சாலையில் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியதால் இருபுறமும் பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மேலும் அந்தப் பேருந்தில் இருந்தவர்கள் இந்த புறம் இருந்த பேருந்துகள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். அதேபோல் இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவற்றில் வந்தவர்கள் வனப் பகுதிக்குள் நுழைந்து தேன்கனிக்கோட்டை பகுதிக்கு சென்றனர்.

தொடர்புடைய செய்தி