தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சமீப நாட்களாக ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் அளவை பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக காணப்பட்டு வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் பொழியும் மழையின் காரணமாக கபினி அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்த நிலையில் ஜூன் 04 இன்று வினாடிக்கு 7,500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லை பகுதியான பீலிகுண்டலவில் மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.