தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் ஒகேனக்கல் வனப் பகுதிகளிலும் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தினசரி அதிகரிப்பதும் சரிவதுமாக உள்ளது. இந்த நிலையில் மே 08 ஆம் தேதி முதல் 1200 கன அடியாக இருந்த நீர்வரத்து, மே 10 இன்று மாலை 5 மணி அளவில் 1500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதி என பீலிகுண்டலலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கீடு செய்து வருகின்றனர்.