தர்மபுரி: பாமக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

80பார்த்தது
தர்மபுரி: பாமக மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு மாவட்ட செயலாளருமான வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் வரவேற்புரை வழங்கினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் செந்தில், பாரி மோகன், மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி மற்றும் மாநில இளைஞர் சங்க செயலாளர் முருகசாமி வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள் பிரகாஷ், சேட்டு, ஆகியோர் முன்னிலை வகித்தினர் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் எனவும் வருகின்ற மே மாதம் பதினொன்றாம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 25, 000 மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது இதில் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி