தர்மபுரி: நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்த எம்எல்ஏ

76பார்த்தது
தர்மபுரி: நலத்திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்த எம்எல்ஏ
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, மருளுகாரன் கொட்டாய் கிராமத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தில் ரூபாய் 6.35 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் குழாய் நீட்டிப்பு செய்தல் மற்றும் இதே கிராமத்தில் மனைப்பிரிவு திட்ட நிதியில் ரூபாய் 5.00 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இந்த விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு மேற்கண்ட இரண்டு பணிகளையும் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

 மேலும் இந்நிகழ்ச்சிகளில், பாகலஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், துணைத் தலைவர் ரம்யாகுமார், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் பெ. பெரியசாமி, பசுமைத் தாயக ஒன்றிய செயலாளர் சுப்ரமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்க ஒன்றிய செயலாளர் வேலுசாமி, வார்டு மன்ற உறுப்பினர் வேலுசாமி, நிர்வாகிகள் அல்லிமுத்து, ராஜேந்திரன், மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி