தர்மபுரி மாவட்டம் தர்மபுரி வனக்கோட்டம் மற்றும் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர், தீர்த்தமலை சரகத்துக்குட்பட்ட காப்புக்காடு பகுதியில் உள்ள கிராம பகுதிகளில் உள்ள பொது மக்களால் காட்டுப்பகுதியில் தீ ஏற்படா வண்ணம் பாதுகாத்தல் குறித்து வனத்துறையினர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை இன்று மார்ச் 22 வழங்கினர். வன உயிரினங்கள், மற்றும் விலங்குகளை வேட்டையாடுவதை தடுப்பது குறித்தும் உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தால் சட்டப்படி குற்றம் எனவும் அப்படி தானாக முன்வந்து வன அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.