தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்குட்பட்ட பாளையம்புதூர் கோம்பை பகுதியில் விவசாய நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதாக தொப்பூர் காவல் துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் தொப்பூர் காவலர்கள் பாளையம் புதூர் கோம்பை கிராமத்திற்கு நேற்று மே 09 நேரில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்வமணி விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டது தெரியவந்தது. அங்கு பயிரிடப்பட்டு இருந்த சுமார் அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், செல்வமணியை தொப்பூர் காவலர்கள் கைது செய்தனர். மேலும் அங்கு நடப்பட்டிருந்த கஞ்சா செடிகளும் வெட்டி தீ வைத்து அழிக்கப்பட்டன.