அய்யன் திருவள்ளுவரின் திருவருவுச்சிலை வெள்ளி விழாவை தர்மபுரி மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று நிறைவு விழாவில் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்களை இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி அவர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் மணி அவர்கள் முன்னிலை வகித்தார் வாசகர் வட்டத்தின் தலைவர் மருத்துவர் செந்தில் தருமபுரி மாவட்ட கவிஞர் மன்றத்தின் செயலாளர் இளங்கோ வாசகர் வட்டத்தின் செயற்குழு உறுப்பினர் பழனி வாசகர் வட்டத்தின் தலைமை ஆசிரியர் தமிழ் தாசன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் முடிவில் முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் அவர்கள் நன்றி கூறினார்.