தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரிமங்கலம் பகுதியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் தேங்காய் விற்பனைக்காக பிரத்தியேகமாக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வார சந்தை நடைபெறுவது வழக்கம் ஜூன் 2 நேற்று நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை திருப்பத்தூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தேங்காய்களை விற்க மற்றும் வாங்க வந்திருந்தனர் நேற்று தேங்காய்கள் அளவு மற்றும் ரகத்தை பொறுத்து 11 ரூபாய் முதல் 19 ரூபாய் வரையில் தேங்காய் விற்பனையானது மேலும் நேற்று ஒரே நாளில் சுமார் 21 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றதாகவும் முகூர்த்த நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்கள் நடைபெற உள்ளதால் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் வர்த்தகம் நன்முறையில் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.