தர்மபுரி: கடனை திருப்பி கேட்டதால் தாக்குதல் வியாபாரி கைது

62பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி மாணிக்க முதலியார் தெருவை சேர்ந்தவர் ராமு, இவருடைய மனைவி ராதா. அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் சரக்கு வாகனத்தில் வைக்கோல் ஏற்றி வியாபாரம் செய்து வருகிறார். முனியப்பன் ராதாவிடம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கி இருந்துள்ளார். முனியப்பன் திருப்பி தராததால் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு ராதா கேட்டு வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதாவின் கணவர் ராமு தனது மனைவி முனியப்பனிடம் கடனாக கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முனியப்பன் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் ராமுவின் தலையில் தாக்கினார். இதில் மண்டை உடைந்து படுகாயம் அடைந்த ராமு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இன்று ராமு பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து முனியப்பனை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி